×

வரதட்சணை கேட்டு சித்ரவதை காதல் மனைவியை தாக்கிய கணவன்

 

பல்லடம்,ஜூலை7: பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டிஅப்பிச்சி கோவில் அருகில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் ரூபினி (24) இவரும் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜா (24) என்பவரும் படிக்கும் போதே 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதிக்காத நிலையில், ரூபினியின் அக்கா கணவர் பழனிவேல் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார். சென்னை பேரூரில் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக ராஜா வேலைக்கு சேர்ந்ததால் ரூபினியை சென்னைக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு வரதட்சனை கேட்டு ரூபினியை ராஜா அடித்து துன்புறுத்தியுள்ளார். நேற்று பல்லடம் கரைப்புதூர் அழைத்து வந்து தனது தந்தை ராஜேந்திரனின் வீட்டில் வைத்து மீண்டும் ரூபினியை ராஜா அடித்து உதைத்து உள்ளார். மேலும் தடியால் ராஜா தாக்கியதில் ரூபினியின் இடது கையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் போலீசாரின் அவசர தொலைபேசி எண்ணிற்கு அழைத்து ஆம்புலென்ஸ் வாகனத்தில் வந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இது பற்றி பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post வரதட்சணை கேட்டு சித்ரவதை காதல் மனைவியை தாக்கிய கணவன் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Rupini ,Rajalakshmi Nagar ,Tankappichi temple ,Palladam Union Arumuthampalayam Panchayat ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது