×

திருவட்டார் அருகே பைக் மீது கார் மோதல் ஜேசிபி ஓட்டுனர் படுகாயம்

குலசேகரம், ஜூலை 7: திருவட்டார் அருகே வியனூர் கோழியோட்டுவிளையை சேர்ந்தவர் ஐசக் சிங் (42). ஜேசிபி ஓட்டுனர். அவரது மனைவி சுஜி (32). சம்பவத்தன்று ஐசக் சிங் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். உடையார்விளை அருகே வந்தபோது எதிரே வந்த கார், ஐசக் சிங் ஓட்டிவந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஐசக் சிங் படுகாயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ஐசக் சிங்கின் மனைவி சுஜி அளித்த புகாரின்பேரில், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த வியனூர் பகுதியை சேர்ந்த மோகன் (54) என்பவர் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவட்டார் அருகே பைக் மீது கார் மோதல் ஜேசிபி ஓட்டுனர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : JCP ,Thiruvattar ,Kulasekaram ,Isaac Singh ,Vyanur Poultry ,Tiruvattar ,JCB ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி