×

ராஜஸ்தான் முதல்வர் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மக்களவை தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத். அவர் மீதும், அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் மீதும் 900 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தொடர்புபடுத்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவதூறாக பேசியதாக டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கஜேந்திர சிங் செகாவத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகஸ்ட் 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ரோஸ் அவென்யூ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

The post ராஜஸ்தான் முதல்வர் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,President of the Court ,Samman ,New Delhi ,Union Water Resources Minister ,Kajendra Singh ,Rajasthan State Jodhpur ,Rajasthan Principal Court ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...