×

சுபமுகூர்த்த நாள், வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: சுபமுகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிறு) ஆகிய விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, இன்று (7ம் தேதி) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 23,626 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

The post சுபமுகூர்த்த நாள், வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Subhamukurtha day ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு