×

விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ.2 கோடி நிதி: உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

சென்னை: சிப்காட் சார்பில் நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் (CSR Fund) கீழ் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காகவும், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காகவும் ரூ.2 கோடி நிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிய முயற்சியின் காரணமாக தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான கவனத்தையும் தமிழ்நாடு மிகவும் ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு விளையாட்டுப்போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காகவும், ஊரகப்பகுதிகளில் விளையாட்டுப்போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் பங்கேற்பாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிப்காட் நிறுவனம், நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் (CSR Fund) நிதியின் கீழ் 2 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு” இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு ச. கிருஷ்ணன் இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திருமதி எ. சுந்தரவல்லி இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப., சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ.2 கோடி நிதி: உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா appeared first on Dinakaran.

Tags : Udayanidhi ,Stalin Minister ,D. R.R. GP ,King ,Chennai ,Cipkat ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...