×

தென் ஆப்பிரிக்காவில் குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு: குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் இன்று வாயு கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் வாயுவை சுவாசித்த குழந்தைகள் உட்பட பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் வாயு கசிவால் மயக்கமடைந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே பகுதியில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று ஒரு பெரிய எரிவாயு டேங்கர் வெடித்ததில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

The post தென் ஆப்பிரிக்காவில் குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு: குழந்தைகள் உள்பட 24 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : African ,Pretoria ,Johannesburg, South Africa ,South… ,South Africa ,Dinakaran ,
× RELATED தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ,...