- நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம்
- வைதீஸ்வரன்கோயில் அரசு பள்ளி
- சீர்காழி
- தமிழ்நாடு அரசு நீர்வள திணைக்களம்
- வைதீஸ்வரன் கோயில் அரசு உயர்நிலைப்பள்ளி
- சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்
- வைதீஸ்வரன் கோயில் அரசு பள்ளி
- தின மலர்
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில், தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் நிலநீர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பிச்சைமணி தலைமை வகித்தார், பள்ளி ஆசிரியர்கள் அருள், சம்பந்தம், சேரன், உஷா, ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர் முகாமில் தஞ்சாவூர் நிலநீர் உபகோட்டம்-1, அதிகாரிகளான, உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் அங்கயற்கண்ணி, நிலவியலாளர்.கார்த்திக், நிலவியலாளர் .ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டு, மாணவர்களுக்கு நிலநீர் விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துகளை படத்துடன் விளக்கி கூறினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் .சங்கர், வரதராஜன் ஆகியோர் செய்தனர்.
The post வைத்தீஸ்வரன்கோயில் அரசு பள்ளியில் நிலநீர் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.