×

மகன் இறந்த துக்கம் தந்தை தற்கொலை

 

திருப்பரங்குன்றம், ஜூலை 6: திருப்பரங்குன்றத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் கோட்டைத்தெருவை சேர்ந்தவர் செல்லையா(73). இவரது மகன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் சோகத்தில் இருந்து வந்த செல்லையா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் செல்லையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பேரன் முத்துகருப்பன் அளித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மகன் இறந்த துக்கம் தந்தை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram ,Tiruparangunram Castle Street ,
× RELATED கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!