×

போலீஸ் பைக்கை திருடிய இரண்டு பேர் கைது

 

மதுரை, ஜூலை 6: போலீஸ்காரர் டூவீலரை திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை கரிமேடு குற்றப்பிரிவு போலீஸ்காரர் பாலமுருகன்(40). இவர் ரோந்து பணிக்கு செல்வதற்காக மாநகர் காவல்துறை சார்பில் டூவீலர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி ஆரப்பாளையம் பகுதியில் நிறுத்தியிருந்த இந்த டூவீலர் திருடு போனது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.

இது குறித்து கரிமேடு போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகிலுள்ள வேம்பளியை சேர்ந்த பிரபு(30), திண்டுக்கல் மாவட்டம், அலவச்சிபட்டி ரஞ்சித் குமார்(20) ஆகியோர் டூவீலரை திருடிச் சென்றது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து டூவீலரை மீட்டனர்.

The post போலீஸ் பைக்கை திருடிய இரண்டு பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Balamurugan ,Madurai Karimedu ,Dinakaran ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் மீது கொடூர தாக்குதல்: போலீசார் விசாரணை