×

பைக் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சாவு

ஆறுமுகநேரி, ஜூலை 6: ஆத்தூர் அருகே பைக் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முள்ளக்காடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் பொன் ரத்தினம் (32). இவர், கூலி வேலை செய்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். கடந்த 2ம் தேதி புல்லாவெளி மதிகெட்டான் ஓடைக்கு தெற்கே நடந்து வந்த போது வேகமாக வந்த பைக், பொன் ரத்தினம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவருக்கும், பைக் ஓட்டிய நபரும் காயமடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பொன் ரத்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுத்தொண்டநல்லூரில் வசித்து வரும் அவரது அண்ணன் பொன் பாண்டி(44) கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் எஸ்ஐ சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

The post பைக் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Arumukaneri ,Athur ,Mullakkadu ,Dinakaran ,
× RELATED ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில்...