×

ஆட்டோ-கார் மோதல் 4 பேர் பரிதாப பலி

விராலிமலை: புதுக்கோட்டை அருகே லோடு ஆட்டோ மீது கார் மோதியதில் வங்கி ஊழியர் உள்பட 4 பேர் பலியாயினர். திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர் முரளி (33). தனியார் வங்கியின் கார் கடன் வழங்கல் பிரதிநிதி. அதே வங்கியில் விவசாய கடன் வழங்கல் மண்டல மேலாளர் ரவிக்குமார்(47). இருவரும் தென்காசியில் உள்ள அரசுடைமை வங்கி ஒன்றில் நகைகளை ஏலத்தில் எடுப்பதற்காக காரில் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். காரை திருச்சி கல்லுக்குழி கணேஷ் குமார் (33) ஓட்டினார். இவர்களுடன் நண்பர்களான தென்காசியைச் சேர்ந்த சுரேஷ்(32), முத்துகிருஷ்ணன் (31) ஆகியோரும் வந்தனர். கார் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே லஞ்சமேடு அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி லோடு ஆட்டோ மீது மோதி, பயணியர் நிழற்குடை மேல் இடித்து நின்றது. இதில் ரவிக்குமார், கணேஷ்குமார், தென்காசி சுரேஷ், முத்துகிருஷ்ணன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

The post ஆட்டோ-கார் மோதல் 4 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Lodu Auto ,Pudukkotta ,
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி