வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (44), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (40). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சசிகுமார் தினமும் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் சசிகுமார் குடிபோதையில் மனைவி லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். அவர்களுக்குள் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த சசிகுமாரின் தந்தை சுப்பிரமணி (70) தட்டிக்கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சசிகுமார், மனைவியையும் தந்தையையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி, கணவனின் தலையை இறுக பிடித்துக்கொள்ள சுப்பிரமணி அரிவாளால் முகம் மற்றும் வாய் பகுதியில் வெட்டி உள்ளார். இதில் சசிகுமார் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து லட்சுமி, சுப்பிரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
The post மருமகளுடன் சேர்ந்து மகனை சரமாரி வெட்டிக்கொன்ற தந்தை appeared first on Dinakaran.