×

செய்யூர் சுற்று வட்டாரத்தில் நெடுஞ்சாலைகளில் மண் குவியல்

செய்யூர்: செய்யூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, நெடுஞ்சாலைகளில் மண் குவியல்கள் ஆங்காங்க காணப்படுகின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டாரத்தை சுற்றி பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை மற்றும் ஒன்றிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலைகள் மற்றும் ஒன்றிய சாலைகள் பல புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டும் சில பகுதியில் சாலை அமைக்கப்படாமலும் உள்ளன.

சாலைகள் அமைக்காமல் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இவ்வாறு இருக்க, புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழைக்காலங்களில் குவியல்கள் சேறாகி, தற்போது காய்ந்து ஆங்காங்கே சாலையில் மண் குவியலாக மாறியுள்ளது. இதில் வாகனங்கள் செல்லும்போது, அவை காற்றில் பறந்து தூசி மண்டலமாக மாறிவிடுகிறது. எனவே, சாலையில் காணப்படும் மண் குவியலை, அவ்வப்போது சீர்செய்ய நெடுஞ்சாலை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் தவறவிடுகின்றனர்.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இவ்வாறு சாலையில் மண் குவியலை அந்தந்த பகுதிகளில் பணி புரியும் நூறு நாள் பணியாளர் மூலம் சரி செய்தால் வாகன விபத்துகள் தவிர்க்கப்படும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, மண் குவியலால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post செய்யூர் சுற்று வட்டாரத்தில் நெடுஞ்சாலைகளில் மண் குவியல் appeared first on Dinakaran.

Tags : Seiyur district ,Seyyur ,Seiyur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ...