×

மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், செயலர் ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழக அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் தமிழ்நாடு கண்ணாடி இழை வளையமைப்பு நிறுவனம் சார்பில் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான திட்ட செயல்முறை விளக்கக் கூட்டம் நேற்று மாலை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் தலைமையில் நடந்தது.

இதில், 55 ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இத்திட்டத்தின் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் டான்பி நெட் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் பாபு, பொறியாளர் சீனிவாசன், ஊராட்சிமன்ற தலைவர்கள் காணியம்பாக்கம் ஜெகதீசன், காட்டுப்பள்ளி சேதுராமன், வல்லூர் உஷா ஜெயக்குமார், கோபி, நாலூர் மஞ்சுளா பஞ்சாட்சரம், கலாவதி, பாக்கியலட்சுமி பாபு, மேரி ரகுபதி, சுகுணா சிவகுமார், கங்கை அமரன், சுஜாதா ரகு, குட்டி, செல்வி, ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், செயலர் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,President ,Meenjoor Regional Development Office ,Ponneri ,Thiruvallur District ,Panchayat Council President ,Meenjur Regional Development Office ,Dinakaran ,
× RELATED தொடுகாடு பஞ்சாயத்தில் பெரிய...