- சமயபுரம்
- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- இந்து மதம்
- அமைச்சர்
- கே. ஷெகார்பாபு
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிவுரையின்படியும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள், வேத ஆகம பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பிரபந்த பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சியும், ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் தங்கி பயில மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 மும் வழங்கப்படும். இப்பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20 வயதுக்குள் இருப்பதோடு, இந்து மதத்தை சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலமான 2 ஆண்டுகள் தங்கி பயிற்சி பெற வேண்டும்.
சேர்க்கை படிவங்களை இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரிலோ அல்லது www.samayapurammariamman.hrce.tn.gov.in
The post சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு! appeared first on Dinakaran.