×

பெரம்பலூர் உழவர் சந்தையில் ரூ.12.5லட்சத்தில் 5 டன் காய்கறி பாதுகாக்க சோலார் குடோன்

பெரம்பலூர்: பெரம்பலூர் உழவர் சந்தையில் 5 டன் காய்கறிகளைப் பாது காக்க ரூ.12.5 லட்சத்தில் \”சோலார் பவர் -கோல்டு ஸ்டோரேஜ் குடோன்\”.விரை வில் பயன்பாட்டிற்கு வரவு ள்ளது. பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் கடந்த 2000 வது ஆண்டு மேமாதம் 7ம் தே தி 50 விவசாயிகளுக்கான விற்பனை மேடைகளுடன் உழவர் சந்தை தொடங்கப் பட்டது.இங்கு தினமும் அன் னமங்கலம், அரசலூர், திரு ப்பெயர், மேலப்புலியூர், எசனை, கீழக்கரை, சோம ண்டாபுதூர், அனுக்கூர், தம்பிரான்பட்டி, நொச்சியம், வேலூர், சத்திரமனை, செட் டிக்குளம், குரூர், வடக்குமா தவி, எளம்பலூர், நாவலூர், களரம்பட்டி உள்ளிட்டப் பல் வேறு கிராமங்களில் இரு ந்து 70க்கும் மேற்பட்ட விவ சாயிகளும், பண்டிகை நாட் களில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்தக் காய்கறி களைக் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

இதன் மூலம் நாளொன்று க்கு 12டன் முதல் 15 டன் கா ய்கறிகள், ரூ5முதல் ரூ6லட் சத்திற்கு விற்பனைசெய்ய ப்படுகிறது. பண்டிகை நாட் களில் 15டன் முதல் 20 டன் காய்கறிகள், விவசாயிக ளால் ரூ8லட்சம்முதல் ரூ 9 லட்சம் வரைக்கும் விற்கப் படுகிறது. 50விவசாயிகளு க்கான விற்பனை மேடைக ளுடன் இயங்கிவந்த உழ வர் சந்தை வளாகத்தில் கட ந்த ஆண்டு ஜூலை மாதம் புதிதாக 2தகரக் கொட்டகை களில் தாலா 12விற்பனை மேடைகள்என 24விற்பனை மேடைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இத னையடுத்து அக்டோபர் 28 ம்தேதி முதல் பரிச்சார்த் தமாக மாலை நேரத்திலும் உழவர் சந்தை இயங்க நட வடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது தொன்மைசார் உணவகமும் இயங்கிவரு கிறது. இந்நிலையில் அன்றைய தினம் விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட விற்ப னை ஆகாத காய்கறி, பழங் கள், வீணாகாமல் இருக்க உழவர்சந்தையில் சோலார் பவர்மூலம் இயங்கக்கூடிய கோல்டு ஸ்டோரேஜ் குடோ ன் தமிழகஅரசு உத்தரவுப் படி மாநில அளவில் 26 உழ வர் சந்தைகளில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றான பெரம்ப லூர் உழவர் சந்தையில் 5 டன் காய்கறிகளை பாது காப்பாக வைத்திட ஏதுவாக ரூ.12.5லட்சம் மதிப்பீட்டில் \”சோலார் பவர் கோல்டு ஸ்டோரேஜ் குடோன்\” அமை க்கப்பட்டுள்ளது. இவை வி ரைவில் பயன்பாட்டிற்கு வ ரும்போதுவிவசாயிகள் தங் களது எளிதில் கெட்டுப்போ கக் கூடிய காய்கறிகளை, விற்பனையாகாத காய்கறி களை கோல்டு ஸ்டோரேஜ் குடோனில் சேமிக்க வழியு ள்ளது. இதற்கு விவசாயிக ள் மத்தியில் மிகுந்தவரவே ற்பு எழுந்துள்ளது.

The post பெரம்பலூர் உழவர் சந்தையில் ரூ.12.5லட்சத்தில் 5 டன் காய்கறி பாதுகாக்க சோலார் குடோன் appeared first on Dinakaran.

Tags : Perambalur Farmers Market ,Perambalur ,market ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை