×

பாளை மேலவாசல் முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா: பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை, ஜூலை 5: பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகர், முருகன் கோயிலின் 11வது வருஷாபிசேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகர், சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் 11வது வருஷாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் அதிகாலை சிறப்பு வேள்விகள், கும்ப பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாசனம், பஞ்ச காவ்யம், கணபதி ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து விமான கலசங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதேபோல் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post பாளை மேலவாசல் முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா: பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Varushabishek ,Palai Melavasal Murugan Temple ,Nellai ,Varushapishek ceremony ,Palayangottai Melavasal Prasanna Vinayagar ,Murugan Temple ,
× RELATED சொந்த ஊரில் உடல் அடக்கம்; நெல்லை காங்....