- புராவி
- புரசங்குளம் கிராமம்
- Chayalgudi
- புரசங்குளம் அய்யனார்
- காமாட்சியம்மன்
- மாசாநாதன்
- குண்டடுவேங்கை முனியசாமி கோவில்
- கடலி
சாயல்குடி, ஜூலை 5: கடலாடி அருகே புரசங்குளம் அய்யனார்,காமாட்சியம்மன், மாசானத்தான் மற்றும் குண்டாற்றுவேங்கை முனியசாமி கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டி புரசங்குளம் கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மண் குதிரை, சாமி உருவங்கள் மற்றும் தவளும் பிள்ளையை ஊர்வலமாக சுமந்து வரும் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் இளைஞர் ஒயிலாட்டம், பெண்கள் கும்பியாட்டம் ஆடி கொண்டாடினர். கிராமத்தின் சார்பில் நேர்த்திக்கடன் தவளும் பிள்ளை மற்றும் சாமி உருவங்கள் செய்ய கடந்த பூதங்குடியில் பிடிமண் வழங்கப்பட்டது.
அங்கு தயார் செய்யப்பட்ட குதிரைகள், தவளும் பிள்ளைகள் மற்றும் கருப்பசாமி, பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் உள்ளிட்ட காவல் தெய்வங்கள், காளை, நாகர். நாய் உருவத்தை கிராம மக்கள் தலையில் சுமந்து கடலாடி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து புரசங்குளம் கிராமத்தில் வைத்து வழிபட்டனர். மண்ணால் செய்யப்பட்ட உருவங்கள் முன்பாக கடந்தாண்டு விளைவிக்கப்பட்ட நெல்லை கொட்டி, பூசாரிகளிடமிருந்து விபூதி கலந்த விதை நெல்லை விவசாயிகள் பெற்றுச் சென்றனர். பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்
கடன் செலுத்தியபிறகு குதிரை மற்றும் தவளும் பிள்ளை, சாமி உருவங்கள் நாளை கிராம எல்லையில் வைக்கப்பட உள்ளது.
The post புரசங்குளம் கிராமத்தில் புரவி எடுப்பு விழா appeared first on Dinakaran.