
கம்பம், ஜூலை 5: கம்பம் அருகே அரளிவிதையை அரைத்து குடித்து முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டி ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (70). இவர் திராட்சைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக இடது பக்க காலில் காயம் ஏற்பட்டு புண் ஆறாமல் இருந்துள்ளது. இதனால் பால்ராஜ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு பால்ராஜ் வீட்டின் முன் வாந்தி எடுத்துள்ளார். இதைக் கண்ட பால்ராஜ் மகன் பிரபு (47) உடனடியாக பால்ராஜை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அரளி விதையை அரைத்து குடித்து முதியவர் சாவு appeared first on Dinakaran.