×

நதிக்குடி மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

 

ஏழாயிரம்பண்ணை, ஜூலை 5: நதிக்குடி மயானத்திற்கு தண்ணீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி கிராமத்தில் இறப்பவர்களின் உடல்களை, அப்பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்து வருகின்றனர். இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பஞ்சாயத்து சார்பில், தகன மேடை அமைக்கப்பட்டது.

இந்த தகன மேடையின் பில்லர்கள் மோசமான நிலையில் உள்ளது. மேலும் தகன மேடை தாழ்வாக உள்ளதால், மழைக் காலங்களில், தகனம் செய்யும் போது, மழை நீர், புகுந்து விடுகிறது. மேலும் இறுதி சடங்குளை செய்ய தண்ணீர் வசதி இல்லாததால், தண்ணீரை தேடி நீண்ட துாரம் அலைய வேண்டிய நிலை உள்ளது. மேலும், மின் விளக்கு வசதி இல்லாதால், மாலை 6 மணிக்கு மேல், இறுதி சடங்குளை செய்ய சிரமமாக உள்ளது. எனவே, நதிக்குடியில் உள்ள மயானத்திற்கு நவீன தகன மேடை, தண்ணீர், மின் விளக்கு வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நதிக்குடி மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nadikudi Cemetery ,Ejayarampannai ,Dinakaran ,
× RELATED வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா