×

மதிமுக கையெழுத்து இயக்கம்

 

திருவில்லிபுத்தூர், ஜூலை 5: தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்ககோரி, திருவில்லிபுத்தூரில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் துவக்கி வைத்தார். இதில் நகர திமுக செயலாளர் அய்யாவு பாண்டியன், நகர் காங்கிரஸ் தலைவர் வன்னியராஜ், காங்., மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி, நகர மதிமுக செயலாளர் ஜெயக்குமார், சிபிஐ நகர செயலாளர் மூர்த்தி, சிபிஎம் நகர செயலாளர் ஜெயக்குமார், விசிக நகர செயலாளர் மைக்கேல் ராஜ் மற்றும் மாவட்ட தலைவர் சதுரகிரி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 9வது வார்டு நகர் மன்ற கவுன்சிலர் முரளி செய்திருந்தார்.

The post மதிமுக கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : MDMK ,Thiruvilliputhur ,Madhyamuk ,RN ,Ravi ,Governor of Tamil Nadu ,Madhimuk ,Dinakaran ,
× RELATED விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை...