×

மதுராந்தகத்தில் நிதிநிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை: கடன் தொல்லையா என விசாரணை

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் நிதிநிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடன் தொல்லையால் அவர் இந்த முடிவுக்கு வந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுராந்தகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் ஆனந்த கிருஷ்ணன் (50). இவருக்கு 2 திருமண மண்டபங்கள் மற்றும் நகைக் கடையும் சொந்தமாக உள்ளன.  மேலும், இவர் நகைச் சீட்டும் நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில், தனது திருமண மண்டபத்தில் நேற்று ஆனந்தகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்த கிருஷ்ணன் பல கோடியில் ஏலச் சீட்டு மற்றும் நகைச் சீட்டு பிடித்து வந்துள்ளார். இதில், சீட்டு போட்ட வாடிக்கையார்களுக்கு ரூ.2 கோடி வரை அவர் கொடுக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் கடன் பிரச்னையில் சிக்கியுள்ளார். கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது யாராவது மிரட்டியதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுராந்தகத்தில் நிதிநிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை: கடன் தொல்லையா என விசாரணை appeared first on Dinakaran.

Tags : Madhuranthak ,Madhuranthakam ,Madhurandakam ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...