×

மாரடைப்பால் ஆசிரியர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பி.எஸ்.சீனிவாசா நகராட்சி பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக சக்திவேல் (53) என்பவர் பணியாற்றி வந்தார். அவர், நேற்று வழக்கம்போல பள்ளிக்கு வந்த ஆசிரியர் சக்திவேல் காலையில் இறைவணக்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த ஆசிரியரை, சக ஆசிரியர்கள் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மாரடைப்பால் ஆசிரியர் பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Sakthivel ,PS Srinivasa Municipal School ,
× RELATED புதுக்கோட்டை அருகே வழக்கு...