×

கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: 2 பேர் காயங்களுடன் சிகிச்சை

கோவை: கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர். கோவை, கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வெளியான முதல் கட்ட தகவல் வருமாறு: கல்லூரியில் ஏற்கனவே இருந்த பக்கவாட்டு சுவரை ஒட்டி 10 அடி அளவிற்கு பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்ததாகவும் அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் அதில் சிக்கியதாக கூறப்படுகிறது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியானதாகவும் 2 பேர் காயங்களுடன் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 4 பேரில் மூன்று பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் வட மாநில தொழிலாளி எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: 2 பேர் காயங்களுடன் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Temple ,Govay ,Khova ,Goa, Goa ,Temple College ,
× RELATED பெண் பாலியல் வன்கொடுமை – அர்ச்சகர் பணியிடை நீக்கம்