×

கஞ்சாவை சாப்பிட்ட எலி: தண்டனையிலிருந்து தப்பிய இரண்டு குற்றவாளிகள்!

சென்னை: சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலி சாப்பிட்டதால் குற்றவாளிகள் 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ராஜகோபால் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரை, மெரினா போலீசார் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அளவை விட குறைவாக நீதிமன்றத்தில் கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டது, 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் 11 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டதாகக் கூறி, வெறும் 11 கிலோ கஞ்சாவை மட்டும் போலீஸார் சமர்ப்பித்திருக்கின்றனர்.

இதனால் குற்றப்பத்திரிகையில் இருந்ததைவிட குறைவான அளவே கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டதால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்றம் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்தது.

The post கஞ்சாவை சாப்பிட்ட எலி: தண்டனையிலிருந்து தப்பிய இரண்டு குற்றவாளிகள்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Nadan Kubbam ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...