×

கிருஷ்னகிரி மாங்கனி திருவிழா – பாமக கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்

சென்னை: கிருஷ்னகிரியில் நடைபெறும் மாங்கனி திருவிழாவை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிய பாமகவின் கோரிக்கை நிராகடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அரசு சார்பில் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாங்கனி திருவிழா நடைபெறும். திருவிழா நடைபெறும் பள்ளிக்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளதால் வேறு இடத்துக்கு மாற்ற கோரி கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாமக செயலாளர் இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 28 ஆண்டுகளாக மாம்பழத் திருவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நடப்பாண்டு நாளை முதல் 30ம் தேதி வரை மாங்கனி திருவிழா நடைபெற உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து போலீஸ் உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்று பாமக நிர்வாகி இளங்கோவன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post கிருஷ்னகிரி மாங்கனி திருவிழா – பாமக கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Mangani Festival ,Bamakha ,CHENNAI ,Bamagawa ,Mangani festival ,Krishnagiri ,Bamaka ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்