×

விவசாய நிலங்களில் சீமைகருவேல மரங்களை அகற்ற 50 சதவீதம் மானியம்

இளையான்குடி, ஜூலை 4: இளையான்குடி வட்டார தோட்டக்கலை துறையில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கறி நாற்றுகள், பழக்கன்று சாகுபடி செய்யவும், மழைநீர் சேமிக்க பண்ணைக்குட்டை அமைக்கவும், பயிர்களுக்கு இயற்கை உரத்திற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தில் நடப்பாண்டில் புதிய திட்டமாக விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.7500 வழங்கப்பட உள்ளது.

மேலும் விவசாயம் செய்ய ஏதுவாக நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, அடங்கல், ஆதார், போட்டோ ஆகியவற்றுடன், இளையான்குடி வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை நேரில் அருகிலும் என, இளையான்குடி வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

The post விவசாய நிலங்களில் சீமைகருவேல மரங்களை அகற்ற 50 சதவீதம் மானியம் appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,
× RELATED இளையான்குடி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சியால் கவலையில் விவசாயிகள்