×

பொன்னமராவதி அருகே நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

 

பொன்னமராவதி,ஜூலை4: பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில் பள்ளி மாணவர்கள், நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. க.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் செல்வி தலைமையில் தலைமையாசிரியர் மணிமேகலை, ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

இதே போல கேசராபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயஜோதி, ஆசிரியர் பாத்திமாபீவி ஆகியோர் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுபத்ரா தலைமையில் 1 முதல் 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் கலைவாணி, கீதா, கலைச்செல்வி, சுமத்திரராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Pudupatti ,K. Pudhupatti ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...