×

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பாசன வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை

 

பேராவூரணி , ஜூலை 4: சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் முருகானந்தம் தஞ்சை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்துள்ள நிலையில், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் நாடியம், மருங்கப்பள்ளம் ,குருவிக்கரம்பை , வாத்தலைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி கிடக்கிறது. இந்த கிளை வாய்க்கால்கள் வழியாகத்தான் ஏரி,குளங்களில் நீர் நிரப்பவும், பாசன வாய்க்கால்களுக்கும் தண்ணீர் செல்ல வேண்டும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் .

The post சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பாசன வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sethubavasthram Union ,Peravoorani ,Setubhavastram ,Setubhavasatram ,
× RELATED பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம்