×

10ம் வகுப்பு தேர்வு எழுதிய 51 வயது சத்துணவு சமையலர்

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகீலா பானு (51). இவர்இ 1989ல் 9ம் வகுப்பு படித்தார். திருமணமானதால் தொடர்ந்து படிக்கவில்லை. இவர் கடந்த 12 ஆண்டுகளாக கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பூவம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வருகிறார். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் சத்துணவு அமைப்பாளராக முடியும் என்பதால் கடந்த மாதம் 10ம் வகுப்பு தனித்தேர்வில் 5 பாடங்களுக்கு தேர்வு எழுதியிருந்தார். இதில் ஆங்கிலம், வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற்றார். நேற்று நடந்த அறிவியல் பாடத்திற்கான தேர்வை கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் ராகீலாபானு எழுதினார். அவர் கூறுகையில், ‘‘நான் 10ம் வகுப்பு தேர்வு எழுத மகன் சாகுல் அமீது புத்தகங்களை வாங்கி கொடுத்து பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். எப்படியாவது சத்துணவு அமைப்பாளராக வேண்டும் என்பதே என் லட்சியம்.’’ என்றார்.

The post 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 51 வயது சத்துணவு சமையலர் appeared first on Dinakaran.

Tags : Karur ,Rakeela Bhanu ,Krishnarayapuram ,Karur district ,Sathunavu Samayalar ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...