×

மேட்டுப்பாளையம் நெல்லை இடையே நிரந்தர சிறப்பு ரயில் வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரயிலில் 5 மாத காலத்தில் 34,167 பேர் பயணித்துள்ளதாகவும், இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.1,56,000 வருவாய் கிடைத்துள்ளதாகவும் ஆர்டிஐ தெரிவிக்கிறது. எனவே, இந்த வாராந்திர சிறப்பு ரயிலை வாரம் இருமுறை இயக்குவதுடன், ஜூலை மாதத்திற்கு பிறகு நிரந்தரமாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, இருந்ததை போல சாதாரண கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். இப்பிரச்னையில், உடனடி நடவடிக்கை வேண்டும்.

The post மேட்டுப்பாளையம் நெல்லை இடையே நிரந்தர சிறப்பு ரயில் வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vico ,Mettupalayam ,Nellie ,Chennai ,Madhyamik General Secretary ,Vaiko ,Nellai ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...