×

அடுத்த 3 மணி நேரத்திற்கு சேலம், தருமபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்திற்கு சேலம், தருமபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Tharumapuri ,Meteorological Centre ,Chennai ,Tarumapuri ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...