×

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை..!!

 

சென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துகொண்டார். மருத்துவமனைக்கு பணிக்கு வந்த ராஜன் மருந்து வழங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை பார்த்து வந்த ராஜன் என்பவர் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல பணிக்கு வந்த அவர், திடீரென மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் எழும்பூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் ராஜனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கம் போல் பணிக்கு வந்த ராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைப்பளு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Egmore Government Children's Hospital ,Egmore Government ,Children's Hospital ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...