×

பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கண்டு பிரதமர் மோடி பயந்துள்ளார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

நெல்லை: பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கண்டு பிரதமர் மோடி பயந்துள்ளார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் கழக போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற நூறு திமுகவினருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பொற்கிழியை வாங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்; பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு பின்பு மோடிக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. அதன் வெளிப்பாடுதான் மகாராஷ்டிராவில் நடந்த கேவலமான அரசியல் நிகழ்வு. இதே போல் கர்நாடகத்திலும் அவர்கள் நடத்தினார்கள். மக்கள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டிவிட்டார்கள். அதேபோல் மகாராஷ்டிராவிலும் பாடம் புகட்டப்படும். மோடியின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.

எத்தனை மோடிகள் வந்தாலும் எத்தனை அண்ணாமலைகள் வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது. தமிழ்நாட்டில் சனாதானத்திற்கு கடுகளவும் இடமில்லை. பெரியார் தோன்றிய பூமி, அண்ணாவால் பண்படுத்தப்பட்ட இயக்கம், கலைஞரால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் சனாதான கொள்கை இங்கு எடுபடாது. அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசியல் பற்றி என்ன தெரியும்? அவரை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

The post பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கண்டு பிரதமர் மோடி பயந்துள்ளார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Patna ,RSBharti ,Nellai ,DMK ,RS Bharti ,RS ,Bharti ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…