×

தகாத உறவால் ஏற்பட்ட சண்டையில் காதலிக்காக மனைவியின் மூக்கை அறுத்த கணவன்: சர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஓடிய விபரீதம்

லக்கிம்பூர் கேரி: தகாத உறவை தட்டிக் கேட்ட மனைவியின் மூக்கை அறுத்த கணவன், துண்டிக்கப்பட்ட மூக்கை தனது சர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம் பன்ஸ்டாலி கிராமத்தில் வசிக்கும் விக்ரம் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முகமதாபாத் கிராமத்தில் வசிக்கும் சீமா தேவியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் விக்ரமுக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதையறிந்த சீமா தேவி, தனது கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தம்பதிகளும் குழந்தைகளும் வழக்கம் போல் சாப்பிட்டனர்.

அடுத்த சில மணி நேரங்களில், தம்பதிக்குள் கள்ளக்காதல் விவகாரம் சண்டையாக மாறியது. அப்போது தனது மனைவியை விக்ரம் அடித்து தாக்கினார். ஒருகட்டத்தில் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால், மனைவியின் மூக்கை அறுத்தார். பின்னர் அறுத்து எடுத்த மூக்கை தனது சர்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் கூச்சலிட்ட சீமா தேவியை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார், விக்ரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். தலைமறைவாக இருந்த விக்ரமை நேற்று போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து லக்கிம்பூர் கேரி போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் கூறுகையில், ‘தனது மனைவியைத் தாக்கி அவரது மூக்கை அறுத்த கணவனை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

The post தகாத உறவால் ஏற்பட்ட சண்டையில் காதலிக்காக மனைவியின் மூக்கை அறுத்த கணவன்: சர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஓடிய விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Lakhimpur Garry ,
× RELATED டைனோசர்கள் போல காங். அழிந்து போகும்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து