×

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அம்மாநிலத்தில் சில மாவட்டங்களில் 150 மிமீ முதல் 200 மிமீ வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும், அதனால் அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அடுத்துள்ள தமிழ்நாட்டிலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Weather Center Info ,Chennai ,Thiruvallur ,Ranippet ,Vellore ,Weather Center Information ,
× RELATED ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது...