வட மாநிலங்களின் சில பகுதிகளில் வெப்பத்தால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் குஜராத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்கள் சிரமப்படும் இடத்தில், ஒருவர் வெள்ளத்தில் படுத்துக் கொண்டு உற்சாகமாக மழையை ரசிக்கும் வீடியோ வைரலாகிறது.
இந்த வீடியோவில், சாலையில் ஓடும் வெள்ள நீரின் மீது பெரிய அளவிலான தெர்மாகோலை போட்டு, அதன் மீது படுத்துக் கொண்டிருக்கும் நபர் ஒருவர், மக்களை பார்த்து ஹாயாக கையசைத்துக் கொண்டிருக்கிறார். வெள்ள நீர் போகும் போக்கில் அவரும் தெர்மாகோல் மூலம் பயணம் செய்கிறார். இந்த நபரின் வீடியோவை பார்த்து மக்களும் மகிழ்ச்சிடைந்துள்ளனர். கனமழை காரணமாக குஜராத்தின் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
The post பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் போவோமா தெர்மாகோல் ஊர்கோலம் appeared first on Dinakaran.