×

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை (03.07.2023) திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளைமறுநாள் (04.07.2023) 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Thengasi ,Virutunagar ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...