×

துவரங்குறிச்சி அருகே குடியிருப்பு பகுதியில் இரைதேடி வந்த மலைப்பாம்பு பிடிபட்டது

துவரங்குறிச்சி, ஜூலை 2: துவரங்குறிச்சி அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் இரை தேடி வந்த 12 அடி நீளம் மலைப்பாம்பு பிடிபட்டது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த மணியங்குறிச்சி பிரிவுசாலை அருகில் நேற்றுமுன்தினம் (30ம் தேதி) நள்ளிரவில கணபதி என்பவரது வீட்டின் அருகில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இரைதேடி வந்துள்ளது. இதனைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் பீதியடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கும் மற்றும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று மலைப்பாம்பை பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அருகில் இருந்த மலைப்பகுதியில் மலைப்பாம்பை கொண்டு சென்று விட்டனர்.

The post துவரங்குறிச்சி அருகே குடியிருப்பு பகுதியில் இரைதேடி வந்த மலைப்பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi ,Duwarankurichi ,Duvarankurichi ,
× RELATED துவரங்குறிச்சி பகுதியில் காட்டு...