×

நீடாமங்கலம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

நீடாமங்கலம், ஜூலை 2: நீடாமங்கலம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். நீடாமங்கலம் அருகே உள்ள ஒரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நீடாமங்கலம் போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ஒரத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடம் 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றி நீடாமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தார்.

The post நீடாமங்கலம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Orathur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருகே பயங்கரம்: பழ வியாபாரி வெட்டி படுகொலை: 5 பேரிடம் விசாரணை