×

ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் டாக்டர் காரில் புகுந்த விஷப் பாம்பு

நாகர்கோவில், ஜூலை 2: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிறுத்திவிட்டிருந்த டாக்டர் காரில் புகுந்த பாம்பை வனத்துறையினர் மீட்டனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் தம்பதியினர் தங்களது காரை நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று மதியம் காரை எடுக்க சென்றனர். அப்போது காரின் டிக்கி பகுதியில் விஷப் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அச்சமடைந்தனர். இது தொடர்பாக நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தீயணைப்பு துறையினர் வருகை தந்து தண்ணீரை பீச்சியடித்து பாம்பை வெளியேற்றி பிடித்தனர். பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டது. பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் நாகர்கோவில் வன அலுவலகம் கொண்டு வந்து பின்னர் பாதுகாக்கப்பட்ட காட்டு பகுதியில் கொண்டு சென்று விட்டனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டிருந்த காரில் விஷப்பாம்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் டாக்டர் காரில் புகுந்த விஷப் பாம்பு appeared first on Dinakaran.

Tags : Asaripallam hospital ,Nagercoil ,Asaripallam Government Medical College Hospital ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...