புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக மரபணு பரிசோதனைக்கு 8 பேர் வரவில்லை.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 8 பேர் நேற்று நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் ஆஜராகி, மரபணு பரிசோதனையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை. பாதிக்கப்பட்ட தங்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிப்பதாக தெரிவித்தனர். அதற்கு சிபிசிஐடி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்னையில் தீர்ப்பை 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
The post வேங்கைவயல் சம்பவம்: மரபணு பரிசோதனையை எதிர்த்த மனு: 4ம் தேதி தீர்ப்பு appeared first on Dinakaran.