மும்பை: கோயிலுக்கு சென்று வந்தது குறித்து நடிகை சாரா அலிகானை சிலர் ட்ரோல் செய்ததற்கு, அவர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் அடிக்கடி கோயிலுக்கு செல்வார். சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஷ்வர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சாமியை அவர் வழிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. சாரா அலிகானின் தாய் அம்ரிதா இந்து மதத்தை சேர்ந்தவர். சாராவின் தந்தை சைப் அலிகான், முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
அதனால் இரு மதங்களை சேர்ந்த நெட்டிசன்களும், சாரா அலிகான் குறித்து கடுமையான விமர்சனங்களை (ட்ரோல்) பதிவு செய்து வந்தனர். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதிலளித்த சாரா அலிகான், ‘ஒருவரை பற்றி கடுமையாக விமர்சிக்கும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. அதனைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு பிடித்திருப்பதை செய்கிறேன். உனக்கு பிடிக்கவில்லை என்பதால், நான் அதனை செய்யக்கூடாது என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும். இது எனது தனிப்பட்ட விருப்பம்.
மூன்றாவது நபர்கள் என்னைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? என்னை அவர்கள் ட்ரோல் செய்கிறார்களா என்பது எனக்கு முக்கியமில்லை. சமீபத்தில் நான் கேதார்நாத்துக்கு சென்று திரும்பியது குறித்தும் சிலர் என்னை ட்ரோல் செய்தனர். இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. பங்களா சாஹிப், மஹாகால் செல்வது போல் அஜ்மீர் ஷெரீப்புக்கும் பக்தியுடன் செல்வேன். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் தொடர்ந்து கோயிலுக்கு செல்வேன்’ என்று கூறினார்.
The post கோயிலுக்கு சென்றது குறித்து விமர்சனம்; என் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிடாதீங்க: ‘ட்ரோலுக்கு’ பதிலளித்த சாரா அலிகான் appeared first on Dinakaran.