- கருடசேவே
- ஸ்ரீசுந்தர வரதராஜர்
- பெருமாள்
- கோவில்
- உத்த்ரமேரூர்
- ஸ்ரீநந்தவள்ளி
- சமேதா
- ஸ்ரீநந்தவரதராஜர்
- பெருமாள் கோயில்
- கருடசேவே
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆனந்தவள்ளி சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத கருடசேவை உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. வருடா வருடம் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஆனி மாத கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று நடந்த கருடசேவை உற்சவத்தில் காலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து மாட வீதிகள் வழியாக வீதியுலா வந்த ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர்.
The post உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் appeared first on Dinakaran.