×

மனைவி கழுத்தறுத்து கொலை: கணவர் போலீசில் சரண்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலைவாணன்(38). இவருக்கும் கீர்த்திகா (29) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த கலைவாணன் கடந்த மாதம் விடுமுறையில் ஊர் திரும்பினார். இந்நிலையில் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டு உள்ளார். ஆனால் கீர்த்திகா கணவன் அனுப்பிய பணத்தை தனது தந்தை வீட்டிற்கும், கணவரின் உறவினர்களுக்கும் கொடுத்ததுடன் ஊதாரித்தனமாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கலைவாணன் கீர்த்திகாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் படுகாயமடைந்த அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.இன்று அதிகாலை கலைவாணன் மணல்மேடு போலீஸ் நிலையத்துக்கு சென்று மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மனைவி கழுத்தறுத்து கொலை: கணவர் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mayiladuthurai District ,Sandalmedu Police ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...