×

மணப்பாறை அருகே சாதி மறுப்பு திருமணத்தால் மாற்று சமூகத்தினர் வன்மம்: மருங்காபுரி வட்டாட்சியர், மணப்பாறை டிஎஸ்பியிடம் புகார் மனு

திண்டுக்கல்: மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டல் விடுத்து கோயிலை இடத்து தள்ளி விட்டதாக பட்டியலின மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கலர்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டியலின பெண் அதே ஊரில் உள்ள மற்றொரு சமூதாய நபரை சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார். இதனால் இரண்டு சமூகத்தினரிடையே கடந்த 3 மாதங்களாக பிரச்சனை நீடிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், பட்டியலின மக்கள் சாமி கும்பிடும் முருகன் கோயிலை மாற்றும் சமூகத்தினர் இடித்து தள்ளி ஊரை காலி செய்து செல்லுமாறு கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆதிக்க சாதியினர் தினமும் சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த வன்மத்தில் ஈடுபடும் மாற்று சமூகத்தினர் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மருங்காபுரி வட்டாட்சியர், மணப்பாறை டிஎஸ்பி ஆகியோரிடம் பட்டியலினத்தவர் புகார் மனு அளித்துள்ளனர்.

The post மணப்பாறை அருகே சாதி மறுப்பு திருமணத்தால் மாற்று சமூகத்தினர் வன்மம்: மருங்காபுரி வட்டாட்சியர், மணப்பாறை டிஎஸ்பியிடம் புகார் மனு appeared first on Dinakaran.

Tags : Manpura ,Murungapuri ,Ratsir ,Manapura ,DSP ,Dindibukal ,Mandapara ,Mangapura ,Wandapura ,
× RELATED மணப்பாறை அருகே சகோதரத்துவத்தை...