×

கர்நாடகா- சென்னைக்கு ஏற்றி சென்றபோது மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து 6 டன் அரிசி மூட்டைகள் சிதறின

*பேரணாம்பட்டு அருகே இரவு விபத்து

பேரணாம்பட்டு : கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு 6 டன் அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கர்நாடகா மாநிலத்திலிருந்து சென்னைக்கு 6 டன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருப்பத்தூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மொர்சப்பல்லியை சேர்ந்த டிரைவர் தமிழ்(30) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பாதையில் முதல் கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்குள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில், லாரி தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் பள்ளத்திலும், சாலையிலும் சிதறின. மேலும், டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதனை பார்த்த அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் கொடுத்த தகவலின்பேரில் பேரணாம்பட்டு போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கி காயமடைந்த 2 பேரையும் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post கர்நாடகா- சென்னைக்கு ஏற்றி சென்றபோது மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து 6 டன் அரிசி மூட்டைகள் சிதறின appeared first on Dinakaran.

Tags : Karnataka- Chennai ,Peranambattu ,Karnataka ,Chennai ,Karnataka- ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...