×

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக வட்டக்கானல் லாட்ஜ்கள், ஓட்டல்களில் சென்னை அதிரடி விரைவு படை ஆய்வு

கொடைக்கானல் : கொடைக்கானல் வட்டக்கானலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு குறித்து சென்னை அதிரடி விரைவு படை போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக வட்டக்கானல் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி அமைதி நிறைந்த இடமாகும். இயற்கை எழில் கொஞ்சும்விதமாக மலை முகடுகள் காட்சியளிப்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்வர். குறிப்பாக, நவம்பர், டிசம்பர், ஜனவரி உள்ளிட்ட மாதங்களில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

வட்டக்கானல் சுற்றுலாத்தலத்தில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதிகள், உணவு அருந்தும் விடுதிகள், வட்டக்கானல் பகுதி பாதுகாப்பாக உள்ளதா என்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. அதன்படி நேற்று ஏடிஎஸ்பி சோலைராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட சென்னை அதிரடி விரைவு படை போலீசார், கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் போலீசார் வட்டக்கானல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகளை தாக்குவதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

The post வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக வட்டக்கானல் லாட்ஜ்கள், ஓட்டல்களில் சென்னை அதிரடி விரைவு படை ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai Rapid Action Force ,Vattakanal ,Kodaikanal ,Kodaikanal Vattakanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...