×

சர்வதேச திறன் போட்டி மாவட்ட அளவிலான போட்டிக்கு பதிவு செய்ய தேதி நீட்டிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024ம் ஆண்டுக்கான சர்வதேச திறனாய்வு போட்டிகள் பிரான்ஸ் நாட்டிலுள்ள லியான் நகரில் செப்டம்பர் 2024-ல் நடைபெற உள்ளது. இதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் திறன் போட்டிகள் கல்வி நிறுவனங்களில் பயில்வோர், தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் என மூன்று பிரிவுகளாக நடைபெற உள்ளது. 1.01.1999 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆண், பெண் ஆகிய இரு பாலரும் இந்த போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர். 55 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஐ.டி.ஐ பயிற்சியாளர்கள், பள்ளி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த நர்சிங் கல்லூரி போன்ற கல்லூரிகளில் பயில்வோர் மற்றும் பயின்று முடித்தவர்கள் மற்றும் தனி நபர் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். www.naanmudhalvan.tn.gov.in/tnskills என்ற இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இணையதளத்தில் பதிவு செய்ய 7.07.2023 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post சர்வதேச திறன் போட்டி மாவட்ட அளவிலான போட்டிக்கு பதிவு செய்ய தேதி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Senthilraj ,International Skills Competitions ,Lyon, France ,International ,Skills Competition ,Dinakaran ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது