×

கஞ்சா வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை

மதுரை, ஜூலை 1: மேலூர் அருகேயுள்ள திருவாதவூரைச் சேர்ந்த கார்த்திக்(26), தர்மா(26) ஆகியோர் கடந்த 5.6.2019ல் டூவீலரில் 23 கிலோ கஞ்சா கடத்தியபோது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கே.விஜயபாண்டியன் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், கார்த்திக் மற்றும் தர்மா ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post கஞ்சா வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Karthik ,Dharma ,Tiruvadavoor ,Melur ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு